திருவண்ணாமலையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறையைக் கண்டித்து வருகிற ஜூலை 16 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜூலை 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணாமலை நகராட்சி அண்ணா சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.