ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!

Dinamani2f2025 01 052fve79c1hg2fdinamani2025 01 02ccu38bvxganasekaran.avif.avif
Spread the love

அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம், சென்னை பெருநகர காவல் துறை அண்ணா நகர் துணை ஆணையர் புக்யா சினேக பிரியா, ஆவடி மாநகர காவல் துறை துணை ஆணையர் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இதையடுத்து, இக்குழு அண்ணா பல்கலை.யில் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி, அவரது ஆண் நண்பரிடமும் விசாரணை நடத்தியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *