அதை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பாமக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அன்புமணியுடனே இருப்பதை புரிந்துகொண்ட டாக்டர். ராமதாஸ், திமுக-வுடன் கூட்டணி வைக்க விரும்பி நெருங்கி வந்தாலும், திமுக தலைமையோ இதுவரை எந்தச் சிக்னலும் காட்டாமல் உள்ளது.
தவெக-வுடன் கூட்டணி வைக்கவும் டாக்டர். ராமதாஸ் முயற்சித்து வந்தாலும், தவெக தலைமையும் பாசிவ்டிவான பதிலைக் கூறவில்லை.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் ஏதாவதொரு கூட்டணியில் இணைந்து, தன் பக்கம்தான் பாமக உள்ளது என்பதை நிரூபிக்க நினைக்கும் டாக்டர். ராமதாஸ், கட்சியின் செயல் தலைவரான மகள் ஸ்ரீகாந்தி, கௌரவத்தலைவர் ஜி.கே.மணி, சேலம் அருள் ஆகியோர் மூலம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைச் சமாதானப்படுத்தி, டாக்டர். ராமதாஸின் அணியை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு, ஓரிரு தொகுதிகளை ஒதுக்கி, வட மாவட்டங்களில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறாராம்.