கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை ராமு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி பகுதியில் வனத்துறையினரால் 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் 55 வயது உடைய ராமு என்கின்ற கும்கி யானை கடந்த மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் யானையை முகாமில் இருந்து வரகாலியார் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையில் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது ஆனால், கடந்த இரண்டு நாள்களாக யானையின் உடல்நலம் மிகவும் மோசமாக காணப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி ராமு யானை உயிரிழந்துள்ளது.