டாஸ்மாக் நிறுவனத்துக்கு காட்டிய அக்கறையை நெல் கொள்முதலில் காட்டவில்லை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு  | concern was not shown in paddy procurement: Nainar Nagendran

Spread the love

தஞ்சாவூர்: தீ​பாவளி விற்​பனை இலக்கை எட்ட டாஸ்​மாக்​கில் காட்​டிய அக்​கறையை நெல் கொள்​முதலில் தமிழக அரசு காட்​ட​வில்லை என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்.

தஞ்​சாவூர் அரு​கே​யுள்ள ஆலக்​குடி நெல் கொள்​முதல் நிலை​யத்தை நேற்று பார்​வை​யிட்ட நயி​னார் நாகேந்​திரன், அங்​கிருந்த விவ​சா​யிகளிடம் குறை​களைக் கேட்​டறிந்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: டெல்டா மாவட்​டங்​களில் நடப்​பாண்டு 6.30 லட்​சம் ஏக்​கரில் குறுவை நெல் சாகுபடி செய்​யப்​பட்​டது. இது கடந்த ஆண்​டை​விட அதி​கம் என்​பது கடந்த ஜூன் மாதமே முதல்​வர் கவனத்​துக்​குச் சென்​றது. நெல் கொள்​முதலுக்​கான அனைத்து முன்​னேற்​பாடு​களும் செய்​து​விட்​டோம் என முதல்​வர் கூறி​னார். ஆனால், எந்த முன்​னேற்​பாட்​டை​யும் செய்​ய​வில்​லை. இதனால், ஒவ்​வொரு கொள்​முதல்நிலை​யத்​தி​லும் நெல் மூட்​டைகள் தேக்​கமடைந்​துள்​ளன.

ஆனால், கொள்​முதல் தாமதத்​துக்கு செறிவூட்​டப்​பட்ட அரிசி​தான் காரணம் என மத்​திய அரசு மீது தமிழக உணவுத் துறை அமைச்​சர் பொய்​யான குற்​றச்​சாட்டை சுமத்​தி​யுள்​ளார். தேவை​யான நேரத்​தில் கொள்​முதல் நிலை​யங்​களைத் திறக்​காமல், உரிய நேரத்​தில் கொள்​முதல் செய்​யாமல் தாமதப்​படுத்​தி​யது தமிழக அரசு​தான். தமிழகத்​தில் நெல் கொள்​முதலில் ஏற்​பட்ட குளறு​படிக்கு தமிழக அரசின் நிர்​வாகத் திறமை​யின்​மையே காரணம். இதற்கு முதல்​வர் பொறுப்​பேற்க வேண்​டும். மழை​யால் பாதிக்​கப்​பட்ட நெற்​ப​யிர்​களுக்கு உரிய இழப்​பீடு வழங்க வேண்​டும். தஞ்​சாவூர் மாவட்​டத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ஆய்வு செய்த பிறகு​தான், கொள்​முதல் தாமதத்​தால் நெல்​மணி​கள் முளைத்த விவரமே தமிழக அரசுக்கு தெரிய​வந்​துள்​ளது. துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் அண்​மை​யில் தஞ்​சாவூர் ரயில் நிலை​யத்​தில் ஆய்வுசெய்​தார்.

ஆனால், மழை​யால் பாதிக்​கப்​பட்ட வயல்​கள், கொள்​முதல் நிலை​யங்​களில் குவித்து வைக்​கப்​பட்​டுள்ள நெல்​மணி​களைப் பார்​வை​யிடவில்லை என விவ​சா​யிகள் குற்​றம் சாட்​டி​உள்​ளனர். தற்​போதும் தஞ்​சாவூர் மாவட்​டத்​தில் பல்​வேறு இடங்​களில் மழை​யால் பயிர்​கள் மூழ்​கி​யுள்​ளன. தமிழக அரசு தீபாவளிக்கு டாஸ்​மாக்​கில் இலக்கு நிர்​ண​யித்து செயல்​பட்​டது. டாஸ்​மாக்​கில் காட்​டிய அக்​கறையை நெல்கொள்​முதலில் தமிழக அரசு காட்​ட​வில்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *