அனுராதபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் சிக்கித் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. மீட்புப் படையினர் பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவிலிருந்து மீட்புப் படைகள், நிவாரணப் பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ கொழும்பில் உள்ள பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையத்தில் இந்திய தூதரகம் அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது.
தற்போது கிடைத்த தகவலின்படி பேரிடரில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123ஆக அதிகரித்திருப்பதாகவும், 130 பேர் காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்நிலையில் டிட்வா புயலால் ஏற்பட்ட இயற்கை பேரிடரை எதிர்கொள்ள இலங்கை அரசு ‘அவசரகால நிலைப் பிரகடனம்’ அறிவித்திருக்கிறது.