டிரம்ப் – நெதன்யாகு இடையே மோதல்: அமெரிக்கா இஸ்ரேல் உறவில் விரிசல் – Kumudam

Spread the love

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

ஈரான் தங்கள் நாடு மீதான தாக்குதலுக்க பதிலடி கொடுக்கும் வகையில், சவுதி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தனித்தே தாக்குதல் நடத்தியது. மேற்கொண்டு தாக்குதலை தொடர வேண்டாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். அதன் பேரில் தாக்குதலை நிறுத்தி உள்ளோம்” என நெதன்யாகு தெரிவித்தார்.

“ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது. அதை செய்ய வேண்டாம் என நெதன்யாகுவிடம் நான் சொல்லி இருந்தேன்” என ட்ரம்ப் தெரிவித்திருந்த இருக்கிறார். இப்படி இருவரும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஈரான் பதிலடி 

தங்கள் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல் மீதான தாக்குதல் மீண்டும் நடந்தால் தங்களின் பதிலடி மிக தீவிரமாக இருக்கும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார். தங்கள் ராணுவம் மிக சிறிய அளவிலான தாக்குதலை நடத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எண்ணெய் வயல்கள் மீதான தாக்குதல் மீண்டும் நடந்தால் முழு ராணுவ பலத்தை கொண்டு தாக்குவோம் என அவர் எச்சரித்துள்ளார்.

இந்தப் பின்னணியில்தான் கத்தாரில் எரிவாயு மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ஐரோப்பா, ஆசியாவுக்கு கத்தாரின் எல்பிஜி ஏற்றுமதி சுமார் 17 சதவீதம் பாதிக்கும் என தகவல் கிடைத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *