டி.ஆர்.பாலுவிடம் 2 மணி நேரம் விசாரணை: அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் சரமாரி கேள்வி | 2 hour interrogation of TR Baalu

1379700
Spread the love

சென்னை: அவதூறு வழக்​கில் திமுக எம்பி டி.ஆர்​.​பாலு​விடம் அண்​ணா​மலை தரப்​பில் 2 மணி நேரத்​துக்​கும் மேலாக குறுக்கு விசா​ரணை நடந்தது. ‘டிஎம்கே பைல்ஸ்’ என்ற பெயரில் தன் மீது கூறப்பட்ட புகார் தொடர்பாக பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலைக்கு எதிராக திமுக பொருளாள​ரும், எம்​.பி.​யு​மான டி.ஆர்​.​பாலு சைதாப்​பேட்டை குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் அவதூறு வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு சைதாப்​பேட்டை 17-வது குற்​ற​வியல் நடு​வர் செந்​தில்​கு​மார் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது டி.ஆர்​.​பாலு​வும், அண்​ணா​மலை​யும் ஆஜராகி​யிருந்​தனர். மனு​தா​ர​ரான டி.ஆர்​.​பாலு​விடம் அண்​ணா​மலை தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் ஆர்​.சி.​பால்​க​னக​ராஜ் குறுக்கு விசா​ரணை நடத்​தி​னார்.

அப்​போது வழக்​கறிஞர் பால்​க​னக​ராஜ், அண்​ணா​மலை வெளி​யிட்ட சொத்து குறிப்​பு​கள் அவதூறு கிடை​யாது. அவை அனைத்​தும் மத்​திய அரசின் தரவு​களில் இருந்​தும், சமூக வலை​தளங்​களில் இருந்​தும் எடுக்​கப்​பட்ட தொகுப்​பு​கள், என்​றார்.

அப்​போது டிஆர்​.​பாலு தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ரிச்​சர்ட்​சன் வில்​சன், அண்​ணா​மலை தரப்​பில் குறுக்கு விசா​ரணை மேற்கொள்ள ஆட்​சேபம் தெரி​வி்த்​தார். மேலும் டி.ஆர்.பாலுவும், அண்ணாமலை முழுமையான அரசியல்வாதி இல்லை என்பதால் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கக்கூடாது, என்றார். மேலும் காவல்​துறை​யில் பணி​யாற்​றிய அண்​ணா​மலைக்கு மட்​டும் ரூ. 5 லட்​சம் மதிப்​பிலான கைக்கடி​காரம் எங்​கிருந்து வந்​தது, என டி.ஆர்.பாலு கேட்டார்.

அதற்கு பால்​க​னக​ராஜ், தமிழக முதல்​வர் ஸ்டா​லினும் கூடத்​தான் ரூ. ஒரு கோடிக்கு கைக்கடி​காரம் அணிந்​துள்​ளார், அதைப்​பற்றி உங்​கள் கருத்து என்ன. தனக்கு அந்த கைக்கடி​காரம் எப்​படி வந்​தது என்​பதை அண்​ணா​மலையே பொது வெளி​யில் விளக்கியுள்ளார், என்​றார்.

தொடர்ந்து வழக்​கறிஞர் பால்​க​னக​ராஜ் எழுப்​பிய பல கேள்வி​களுக்கு டி.ஆர்​.​பாலு பதிலளிக்க மறுத்​து​விட்​டார்​. சு​மார் 2 மணி நேரத்​துக்​கும் மேலாக குறுக்கு விசாரணை நீடித்தது. பின்னர் விசா​ரணையை நீதிபதி வரும் நவ.11-க்கு தள்ளி வைத்​துள்​ளார். அன்​றைய தினம் டி.ஆர்​.​ பாலுவை குறுக்கு வி​சா​ரணை செய்ய அண்​ணா​மலைக்கு அனு​மதி வழங்க வேண்​டும் என்ற கோரிக்​கை​யை ஏற்​ற நீதிப​தி வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *