டெக்சாஸ் ஆஸ்டின் துப்பாக்கிச் சூடு: இந்திய மாணவி பலி|21-Year-Old Indian Student Shot Dead in Texas

Spread the love

நேற்று முன்தினம் (மார்ச் 1) மதியம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு ஒன்று நடந்துள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த 21 வயது மாணவி.

இந்தத் துப்பாக்கிச் சூடு தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கி

துப்பாக்கி
சித்தரிப்புப் படம்

இந்தியாவைச் சேர்ந்த 21 வயது மாணவியின் பெயர் சவிதா ஷான். இவர் இன்னும் சில மாதங்களில் படிப்பை முடிக்க உள்ளார்.

சவிதா ஷானை “சூப்பர் ஸ்டார் மாணவர்’ என்று அவரது பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் சவிதா ஷான் படித்து வந்த பல்கலைக்கழகம் அருகே தான் நடந்துள்ளது.

சவிதா ஷானுடன் சில மாணவர்களும் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் இப்போது சிகிச்சையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *