டெட் தேர்வு வழக்கில் தீர்ப்புக்கு எதிராக ஆசிரியர் கூட்டமைப்பு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு | review petition in Supreme Court against TET exam verdict

1376958
Spread the love

சென்னை: டெட்​ தேர்வு வழக்கு தீர்ப்​பில் இந்த மாத இறு​திக்​குள் உச்​ச நீதிமன்​றத்​தில் சீராய்வு மனு தாக்​கல் செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருப்​ப​தாக இந்​திய பள்ளி ஆசிரியர் கூட்​டமைப்பு தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக இந்​திய பள்ளி ஆசிரியர் கூட்​டமைப்​பின் அகில இந்​திய தலை​வர் சி.கே.​பார​தி, பொதுச்​செய​லா​ளர் சாவா ரவி, துணைத் தலை​வர் அ.ம​யில், செய​லா​ளர் அ.மாய​வன், செயற்​குழு உறுப்​பினர் செ.​நா.ஜ​னார்த்​தனன் ஆகியோர் கூட்​டாக நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஆசிரியர் தகு​தித்​தேர்​வில் உச்​சநீ​தி​மன்​றம் வழங்​கி​யுள்ள தீர்ப்பு குறித்​தும், கட்​டாய கல்வி உரிமைச் சட்​டத்​தின் பிரிவு 23-ஐ திருத்​து​வது குறித்​தும் மறுஆய்வு மனு தாக்​கல் செய்ய பிரதமர் மற்​றும் மத்​திய கல்வி அமைச்​சரிடம் கோரிக்கை மனு சமர்ப்​பி்க்​கப்​பட்​டுள்​ளது. மேலும், உச்​சநீ​தி​மன்​றத்​தில் கூட்​டமைப்பு சார்​பில் சீராய்வு மனு தாக்​கல் செய்​ய​வும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

டெட் வழக்​கில் உச்​ச நீ​தி​மன்​றம் வழங்​கிய தீர்ப்​பி​னால் நாடு முழு​வதும் 25 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள் பாதிக்​கப்​படும் சூழல் உள்​ளது. கட்​டாயக் கல்வி உரிமை சட்​டம் அமல்​படுத்​தப்​படு​வதற்கு முன்பு நியமிக்​கப்​பட்ட ஆசிரியர்​களுக்கு தகு​தித்​தேர்வு கட்​டா​யம் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்​சில் (என்​சிடிஇ) குறிப்​பிட​வில்லை என்​பது சீராய்வு மனு​வில் சுட்​டிக்​காட்​டப்​படும்.இவ்​வாறு அவர்​கள் கூறி​யுள்​ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *