டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் பணியில் தொய்வு: நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனை | Farmers in Delta districts are suffering due to delays

1380270
Spread the love

தஞ்சாவூர்: தஞ்​சாவூர் உள்​ளிட்ட டெல்டா மாவட்​டங்​களில் 6 லட்​சம் ஏக்​கரில் குறுவை சாகுபடி மேற்​கொள்​ளப்​பட்​டு, 80 சதவீதம் அறு​வடைப் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. எஞ்​சி​யுள்ள வயல்​களில் பெரும்​பாலான இடங்​களில் மழைநீர் தேங்​கி​யுள்​ள​தால், அறு​வடைப் பணி​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.

கொள்​முதல் நிலை​யங்​களில் சாக்​கு​கள் பற்​றாக்​குறை, ஏற்​கெனவே கொள்​முதல் செய்யப்பட்ட நெல்லை சேமிப்​புக் கிடங்​களுக்கு அனுப்​பாத​து போன்றவற்றால் தற்​போது கூடு​தலாக நெல்​லைக் கொள்​முதல் செய்ய முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

மேலும், மழைநீரில் நனைந்து நெல்​லில் ஈரப்​ப​தம் அளவு அதி​கரித்​துள்​ளது. இது​போன்ற காரணங்​களால், கொள்​முதல் நிலைய வளாகங்​களி​லும், அவற்​றின் அரு​கே​யுள்ள சாலைகளி​லும் நெல்​லைக் கொட்​டி​வைத்து விவ​சா​யிகள் வாரக்​கணக்​கில் காத்​திருக்​கின்​றனர். இவ்​வாறு பல்​வேறு கொள்​முதல் நிலை​யங்​களி​லும் ஆயிரக்​கணக்​கான நெல் மூட்​டைகள் தேங்​கி​யுள்​ளன. இதனால், நெல்லை விற்று தீபாவளி பண்​டிகை​யைக் கொண்​டாட திட்​ட​மிட்​டிருந்த விவ​சா​யிகள் பெருத்த ஏமாற்​றம் அடைந்​துள்​ளனர். மேலும், வழக்​க​மான உற்​சாகத்​துடன் தீபாவளியைக் கொண்​டாட முடி​யாத நிலைக்​குத் தள்​ளப்​பட்​டுள்​ளனர்.

குறிப்​பாக, காட்​டூர், கண்​டிதம்​பட்டு உள்​ளிட்ட கொள்​முதல் நிலை​யங்​களில் 12 நாட்​களுக்கு மேலாக நெல் மூட்​டைகளு​டன் காத்​திருப்​ப​தாக விவ​சா​யிகள் வேதனை தெரி​வித்​தனர். இதுகுறித்து அவர்​கள் கூறும்​போது, “12 நாட்​களாக காத்​திருந்​தும் நெல் கொள்​முதல் செய்​யப்​பட​வில்​லை. இதனால், கடன் வாங்கி தீபாவளியைக் கொண்​டாட வேண்​டிய நிலை ஏற்​பட்​டுள்​ளது. எனவே, கொள்​முதல் நிலை​யங்​களில் நெல்லை விற்க காத்​திருக்​கும் விவ​சா​யிகளுக்கு இந்த தீபாவளி கசப்​பாக மாறி​உள்​ளது” என்​றனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *