இந்திய நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவின் போது சிறப்பு அழைப்பாளர்களாக பழங்குடியினரை அழைத்து அவர்களைக் கெளவரப்படுத்து வருகிறது மத்திய அரசு.
அந்த வகையில், தேனி மாவட்டம் சேர்ந்த பளியர் பழங்குடியினத் தலைவர் கண்ணன் மற்றும் அவரது மனைவி கனகா ஆகியோரை விவிஜபி பிரிவின் கீழ் முதன்மை சிறப்பு அழைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.