ட்ரம்ப் அறிவிப்புக்கு முன் எண்ணெய் வீழ்ச்சி: சந்தேகத்தில் அமெரிக்கா|$950M Oil Dump Before Trump’s Big Reveal Sparks Probe

Spread the love

கடந்த மார்ச் 23 மற்றும் ஏப்ரல் 7 தேதிகளில், கச்சா எண்ணெய் விலையின் “திடீர்’ வீழ்ச்சி குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளனர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

இந்த இரண்டு தேதிகளில், மார்ச் 23-ம் தேதி அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். உடனடி தாக்குதல் நிறுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 7-ம் தேதி இரண்டு வார போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

இப்படி இந்த அறிவிப்புகள் வரும்… இப்போது வரும் என்று எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.

ஆனால், இந்த அறிவிப்புகள் வெளியாவதற்கு கிட்டத்தட்ட அரை‌ மணி நேரத்திற்கு முன்பு கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பெரியளவிலான தொகை வெளியேற்றப்பட்டிருக்கிறது.

இதனால், அதன் விலையும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இப்படி மார்ச் 23-ம் தேதி கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து 500 மில்லியன் டாலர் வெளியேற்றப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 7-ம் தேதி, 950 மில்லியன் டாலர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றன.

இந்த வர்த்தகமும், இதனால் உண்டான எண்ணெய் விலை வீழ்ச்சியும் எப்படி சாத்தியம் என்றும், அறிவிப்பு குறித்த தகவல்கள் எப்படி கசிந்தன‌ என்று இரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து விசாரிக்கவும் கோரியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *