அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் யார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதற்கான பதில், ‘கெவின் வாஸ்’ என்று தெரிய வந்தது.
இந்தப் பதில் தெரிவதற்கு முன்னால், தங்கம் விலையில் ஒரு நிலையற்ற தன்மை இருந்தது. பதில் தெரிந்ததும், சந்தை ஒரு நிலைத்தன்மையைப் பெற்றது.

ஆனால், இந்த ஒரே ஒரு கேள்வியால் மட்டும் தங்கம் விலை உயர்ந்து வந்ததா என்று கேட்டால், ‘இல்லவே இல்லை’. இதைத் தாண்டி பல காரணிகள் தங்கம் விலையில் முக்கிய பங்காற்றின.
ஆனால், அவற்றுக்கான பதில் இன்னமும் தெரியவில்லை. அவை இன்னும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றன.
ஆக, உலக அளவில் ஒரு நிலையற்ற தன்மை இருந்துதான் வருகிறது.
அதனால், முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் மீண்டும் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.