ஓ.பி.எஸ்-ஸைப் பார்த்து ‘திமுக-வின் பி டீம்’ என எடப்பாடி அப்போது வைத்த குற்றச்சாட்டு வெறும் அரசியல் விமர்சனமே தவிர, அதில் உண்மையில்லை. ஏனென்றால் இறுதிவரை அதிமுக-வில் இணைவதற்கு ஓ.பன்னீர் செல்வம் தயாராகவே இருந்தார். அவரின் முடிவு திமுக தான் என்றால் அவர் அப்போதே வந்திருக்கலாம். ஆனால், ஓ.பி.எஸ்-ன் இந்த முடிவுக்கு எடப்பாடிதான் காரணம்.
தி.மு.க-அ.தி.மு.க இடையே அரசியல் எதிர்ப்பு தான் இருக்கிறதே தவிர கொள்கை மாற்றம் அல்ல. இது திராவிட சக்திகளின் மறுசீரமைப்பு எனக் கூறும் முதல்வர் ஸ்டாலின், பழைய பா.ஜ.க உறுப்பினர்களை கூட இழுத்து, மிக லாவகமாக காய்களை நகர்த்துகிறார்.

கொள்கை ரீதியாக திராவிடச் சக்திகளை ஒன்றிணைப்பதன் மூலம், 2026 தேர்தலில் தி.மு.க தனித்துப் போட்டியிட்டாலும் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் அளவுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார். ஓ.பி.எஸ்-ஸிற்கு போடி தொகுதியே மீண்டும் ஒதுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஸ்டாலினின் ஆட்சியின் மீதான மக்கள் செல்வாக்கே இத்தகைய பெரிய தலைவர்களை தி.மு.க நோக்கி ஈர்க்கிறது.” என்றார்.
மறுபுறம் அதிமுக ஆதரவாளர்களோ, “பன்னீர் ஒரு துரோகி என்று சொல்லி தான் வந்தோம். இப்போது அதனை மக்கள் கண்கூடாக பார்த்துவிட்டார்கள். பன்னீர் எப்போதுமே கட்சிக்காக செயல்பட்டவர் கிடையாது. தனக்காக செயல்பட்டவர் தான் பன்னீர். கட்சிக்காக செயல்பட்டவராக இருந்திருந்தால், தலைமை அலுவலகத்தில் அப்படி ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பாரா? தீய சக்தி திமுக எப்படி இப்போது தாய் கழகம் ஆனது? அவருக்கு ஆதாயம் வேண்டும் என்பது மட்டுமே அவர் நோக்கம். அவர் மூலம் அவர் சார்ந்த சமூகம் கூட பலன் அடைந்தது கிடையாது. அதனால், அவரின் திமுக சேர்க்கை, அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்கிறார்கள்.