பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் இருந்தபோது, மாஞ்சியின் தியாகத்தைக் கௌரவிக்கும் விதமாக அவரைத் தனது முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார். மேலும், அரசாங்கம் வழங்கிய நிலத்தை, தன் கிராமத்தில் மருத்துவமனை கட்டுவதற்காகவே மாஞ்சி அர்ப்பணித்தார்.
தன்னலமற்ற அந்த மாபெரும் மனிதர், 17 ஆகஸ்ட் 2007 அன்று, தனது 73 வயதில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் பித்தப்பை புற்றுநோயால் காலமானார். பீகார் மாநில அரசு அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளைச் செய்து கௌரவித்தது.
இன்று, அவர் உருவாக்கிய அந்தப் பாதை `தசரத் மாஞ்சி சாலை’ என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. கெலூர் கிராமத்தில் அவருக்கு ஒரு நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது.
இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2015-ல் Manjhi: The Mountain Man என்ற பாலிவுட் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இவரது ஈடு இணையற்ற சேவையைப் போற்றும் விதமாக, இந்திய அரசாங்கம் 2016-ம் ஆண்டு இவருடைய பெயரில் தபால் தலையை வெளியிட்டது.