தஞ்சாவூர்: ”அந்த கூட்டத்தால் யாராலும் எதுவும் சாதிக்க முடியாது”- விஜயை சாடிய உதயநிதி! | dmk youth wing meeting udhayanidhi speech attacking Vijay

Spread the love

இவர்கள் இப்படி என்றால், இன்னொரு பக்கம் யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. ஒரு கொள்கை, லட்சியம், கோட்பாடு எதுவுமே இல்லாமல், அப்படி என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அரசியல் என்றால் ஏதோ பொழுதுபோக்கு என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் என்பது மக்கள் பணிதான், பொழுதுபோக்கு கிடையாது, அது ஒரு அர்ப்பணிப்பு, அது ஒரு தியாகம் என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இந்த அர்ப்பணிப்பும் தியாகமும் இல்லாத அந்த கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும் எதுவும் சாதிக்க முடியாது. ஆகவே, இப்படிப் பாசிஸ்ட்டுகளையும் பழைய, புதிய அடிமைகளையும் வீழ்த்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கப்போகின்ற போர்தான் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் என்பதை நாம் மனதில் வைத்து செயல்பட வேண்டும். இந்தப் போரில் தமிழ்நாட்டைக் காக்கப் போகின்ற முன்களப் பணியாளர்கள், வீரர்கள் நீங்கள்தான். வரும் சட்டமன்றத் தேர்தல் சமூக நீதிக்கும் சமூக அநீதிக்கும் இடையில் நடக்கப் போகின்ற தேர்தல். தமிழ்மொழிக்கும் இந்தி மொழித் திணிப்புக்கும் இடையில் நடக்கப் போகின்ற ஒரு தேர்தல். தமிழ்நாடு என்றைக்குமே தலைகுனியாது என்று டெல்லிக்கு நாம் தெரிவிக்க வேண்டிய தேர்தல். தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்குக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது (Out of control) என்பதைத் தெரிவிக்க வேண்டிய தேர்தல்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *