”தஞ்சாவூர் தொகுதியில் பாஜக 5 வருட நம்பிக்கைக்கு கிடைத்த ஏமாற்றம்”- அதிமுகவினர் ஆதங்கம்!- thanjavur admk edappaadi palanisamy and n.s.saravanan issue

Spread the love

அதிமுக-வில் தஞ்சாவூர் மாநகரச் செயலாளராக இருப்பவர் என்.எஸ்.சரவணன். தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக சரவணன் உறுதி செய்யப்பட்டு விட்டதாக சில மாதங்களுக்கு முன்பே பரவலாக பேசப்பட்டது. எடப்பாடி பழனிசாமி பச்சை கொடி காட்டியதால் அவர் தொகுதிக்குள் பிரச்சாரம் செய்து வந்தார்.

அதிமுக-வினர் மட்டுமின்றி திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் கூட சரவணன் தான் வேட்பாளர் என பேசினர். திமுகவில் வேட்பாளர் ரேஸில் உள்ளவர்கள் கூட, சரவணன் எங்களுக்கு ஃடப் கொடுப்பார் என்றனர்.

தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றில் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல் கொடுக்கும் சரவணன்

தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றில் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல் கொடுக்கும் சரவணன்

எல்லோரும் இப்படி பேசிய நிலையில், அதிமுக கூட்டணியில் நேற்று யாருக்கு எந்தெந்த தொகுதி என்பது அறிவிக்கப்பட்டது. இதில் தஞ்சாவூர் பாஜக-வுக்கு என்றதும் சரவணன் உள்ளிட்ட பலரும் அதிர்ந்தனர். தஞ்சாவூர் சரவணனுக்கு இல்லையானு கேட்டு ஆதங்கப்பட்டனர். இது தஞ்சாவூருக்குள் பேசு பொருளானது.

சரவணின் ஆதரவாளர்கள் ரயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலை முன்பு திரண்டனர். இந்த தகவல் சென்னையில் இருந்த சரவணனுக்கு சொல்லப்பட, சில நிர்வாகிகள் மூலம், தலைமை எடுக்கின்ற முடிவுக்கு கட்டுப்பட வேண்டும், யாருக்கும், எதற்கும் நாமே இடம் கொடுக்க கூடாதுனு கலைந்து போக சொன்னாராம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் தொகுதி உனக்கு தான் வேலையை பார்னு எடப்பாடி பழனிசாமியே நம்பிக்கை அளித்தார். இப்போது தொகுதி பாஜக-வுக்கு சென்றது ஏன் எனவும் சரவணன் ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *