டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோவில், வயல் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக வயல்களில் மழைநீர் தேங்கியதால் குளம் போல மாறி, நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

தஞ்சாவூர் அருகேயுள்ள அம்மாப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், வயல்களில் மழைநீர் தேங்கியதால் வயல்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை நடவு செய்திருந்தனர்.
இந்நிலையில், பெய்த கனமழையால் நடவு செய்யப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆன நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், “அம்மாப்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது.