தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி, கடந்த 10-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில், இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றவர், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மறுநாள் 11-ம் தேதி மதியம் சுமார் 2 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். குற்றவாளியை கண்டுபிடித்தால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வோம் என பெற்றோர்கள், உறவினர்கள் திட்டவட்டமாகக் கூறினர். ஊர் மக்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த நிலையில், 9 நாள்களுக்குப் பிறகு குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி, ”கடந்த மார்ச் 11-ம் தேதி, மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு கொலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி தலைமையில் உயர் அதிகாரிகள் முகாமிட்டு, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.