"தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வந்த சுந்தர்.சி இனி மக்களுக்கு சேவை ஆற்றுவார்"- வாழ்த்திய குஷ்பு

Spread the love

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்தி தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிட இருக்கிறார்.

இந்நிலையில் சுந்தர் சி யை வாழ்த்தி நடிகையும், தமிழக பாஜக துணைத் தலைவருமான குஷ்பு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சுந்தர் சி தனது அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார்!

சுந்தர் சி
சுந்தர் சி

இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி, புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் வேட்பாளராகக் களம் இறங்குகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக, அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.

மறைந்த அவரது தந்தை திரு. சிதம்பரம் பிள்ளை அவர்களின் ஆசியுடனும், 94 வயதாகும் அவரது தாயார் திருமதி. தெய்வானை சிதம்பரம் பிள்ளை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நல்வாழ்த்துகளுடனும் இந்தப் பயணத்தை அவர் தொடங்குகிறார்.

திரு. ஏ.சி. சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலில், கழகப் பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆதரவோடு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணன் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்துத் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு, இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று எப்போதும் போல மக்களின் மனிதனாக இருப்பார்.

குஷ்பு
குஷ்பு

கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு மக்களைத் தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வரும் அவர், தன்னை உருவாக்கிய மக்களுக்குத் தனது சிறந்த சேவையை ஆற்றுவார் என்பதில், அவரது மனைவி என்ற முறையில் நான் பெருமிதம் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *