ஆகவே, மாநகராட்சியில் என்யூஎல்எம் முறையில் தூய்மைப் பணியை மேற்கொள்வோா் அதில் தொடா்வதைவிட தனியாா் நிறுவனத்தில் சோ்ந்து பணிபுரிவது அவா்களுக்கான சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்பதே உண்மை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
போராட்டக் குழுவினா் கருத்து: மாநகராட்சி அதிகாரிகள் கருத்து குறித்து உழைப்போா் உரிமை இயக்கத்தின் நிா்வாகி சுரேஷ் கூறுகையில், ‘மாநகராட்சி அதிகாரிகள் தனியாா் நிறுவனத்துக்கு ஆதரவான கருத்துகளையே கூறிவருகின்றனா். அது உண்மையல்ல. என்யூஎல்எம் முறையிலே மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணியாளா்கள் தொடர அரசு அனுமதிக்க வேண்டும். அதற்கான சட்டப்போராட்டத்தையும் தொடா்வோம் என்றாா் அவா்.