“தமிழகத்திலும் எங்கள் கூட்டணி அபார வெற்றி பெறும்” – நயினார் நாகேந்திரன் நம்பிக்கை | nainar nagenthran hopes for victory in TN

Spread the love

பிஹாரை அடுத்​து, 2026 தமிழக சட்​டப்பேரவை தேர்​தலிலும் எங்​கள் கூட்​டணி அபார வெற்றி பெறும் என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார்.

பிஹார் தேர்​தல் முடிவு​கள் நேற்று வெளி​யான நிலை​யில், பெரு​வாரி​யான இடங்​களில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி முன்​னிலை வகித்​தது. முன்​னணி நில​வரங்​கள் வெளி​யாகிக் கொண்​டிருந்த சமயத்​தில் நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறிய​தாவது: பிஹார் மாநிலத்​தில் உள்ள 243 தொகு​தி​களில், தேசிய ஜனநாயகக் கூட்​டணி 190 இடங்​களில் முன்​னணி​யில் உள்​ளது. இது எங்​கள் கூட்​ட​ணிக்கு கிடைத்த மாபெரும் வெற்​றி. அந்த மாநிலத்​தில் ஏற்​கெனவே நடந்​து​வ​ரும் நல்​லாட்​சியை மக்​கள் அங்​கீகரித்​துள்​ளனர்.

அத்​துடன், தொடர்ச்​சி​யாக இண்​டியா கூட்​ட​ணியை மக்​கள் புறக்​கணித்​துக் கொண்டே வரு​கி​றார்​கள். இண்​டியா கூட்​ட​ணிக்கு தேசிய அளவில் தொடர் தோல்வி​கள் ஏற்​பட்டு வரு​கிறது. பிஹாரை அடுத்​து, 2026 தமிழக சட்​டப்பேரவை தேர்​தலிலும் எங்​கள் கூட்​டணி அபார வெற்றி பெறும். தேர்​தல் ஆணை​யம், அமலாக்​கத்​துறை, வரு​மான வரித்​துறை – இவையெல்​லாமே சுதந்​திர​மாகச் செயல்​படும் தனிப்​பட்ட அமைப்​பு​கள்.

இவற்​றை, அரசி​யல் கட்​சி​யுடன் ஒப்​பிட்​டுப் பேசுவது சரியல்ல. கடந்த 2021 சட்​டப்பேரவை தேர்​தலில் திமுக வெற்றி பெற்​ற​போது, தேர்​தல் ஆணை​யம் யாருடைய கட்​டுப்​பாட்​டில் இருந்​தது? திமுக ஜெயித்​தால் தேர்​தல் ஆணை​யம் நன்​றாக செயல்​படு​கிறது என்று அர்த்​தம். தோற்​று​விட்​டால் தேர்​தல் ஆணை​யம் ஒரு சாராருக்கு ஆதர​வாக செயல்​படு​கிறது என்று அர்த்​த​மா? இப்​படிப் பேசுவது முற்​றி​லும் சந்​தர்ப்​ப​வாத அரசி​யல்.

தேர்​தல் ஆணை​யத்​தின் மீது இப்​படி​யெல்​லாம் அவதூறு பரப்​பிய​வர்​களை பிஹார் மக்​கள் புறக்​கணித்​துள்​ளனர். அங்கு இந்​தியா கூட்​ட​ணி​யின் தோல்விக்கு இதுவே முக்​கிய காரணம். பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்​டணி பெற்​றிருக்​கும் இந்த வெற்​றி​யானது எனக்கு மிகுந்த மகிழ்ச்​சி​யைத் தரு​கிறது.இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *