தமிழகத்தில் குரூப்-4 தேர்வு மூலம் 30,000 காலிப் பணியிடங்களை நிரப்ப சீ்மான் வலியுறுத்தல் | Seeman urges tn to fill 30000 vacant posts through Group 4 exam

Spread the love

சென்னை: குரூப்-4 தேர்வு மூலம் நடப்​பாண்​டில் 30 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்​டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்​து, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: கடந்த 4 ஆண்​டு​களில் ஓய்​வு​பெற்​றோர் எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ளது. இதன் காரண​மாக, அரசுத் துறை​களில் உள்ள காலிப்​பணி​யிடங்​களும் 4 லட்​சத்​துக்​கும் மேல் உயர்ந்​துள்​ளது. அது​மட்​டுமின்றி இளைஞர்​கள் பலரும் அரசுப் பணி​யில் சேர முயன்று வரு​வ​தால் போட்​டித் தேர்​வர்​களின் எண்​ணிக்​கை​யும் லட்​சக்​கணக்​கில் அதி​கரித்​துள்​ளது.

இந்​நிலை​யில், 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது ஆட்​சிக்கு வந்​தால், மூன்​றரை லட்​சம் அரசுப் பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என்று திமுக வாக்​குறுதி அளித்​திருந்​தது. இதனால் அதிக காலிப்​பணி​யிடங்​களுக்கு போட்​டித் தேர்வு நடை​பெறும் என்று தமிழக இளைஞர்​கள் எதிர்​பார்த்த நிலை​யில், 2 ஆண்டு கரோனா இடை வெளிக்​குப் பிறகு, 2022-ம் ஆண்டு நடை​பெற்ற குரூப்-4 தேர்​வில் வெறும் 10,300 பணி​யிடங்​கள் மட்​டுமே நிரப்​பப்​படும் என்று திமுக அரசு அறி​வித்து ஏமாற்​றியது.

மேலும், 2023-ம் ஆண்டு குரூப்-4 தேர்வு நடத்​தாமல் போட்​டித் தேர்​வர்​கள் வயிற்​றில் அடித்​தது. இதைத் தொடர்ந்​து, 2024-ம் ஆண்டு நடை​பெற்ற குரூப்-4 தேர்​வில் வெறும் 9,532 காலிப்​ பணி​யிடங்​களை மட்​டுமே நிரப்பி வஞ்​சித்​தது. இந்​நிலை​யில் ஆட்சி முடி​யும் கடைசி ஆண்​டில், இது​வரை இல்​லாத அளவுக்கு மிகமிகக் குறைந்த அளவாக 3,945 பணி​யிடங்​கள் மட்​டுமே நிரப்​பப்​படும் என்று அறி​வித்து திமுக அரசு அதிர்ச்​சி​யளித்​தது.

அதன்​பின் கூடு​தலாக 747 இடங்​கள் நிரப்​பப்​படும் என்று தற்​போது அறி​வித்​துள்​ளது. இதனால் அரசுப்​பணி கனவு நனவாகும் என்று நம்​பிக்​கையோடு, இரவு பகலாக படித்​து, கடுமை​யாக உழைத்த அன்பு தம்​பி, தங்​கைகள் மிகுந்த மன உளைச்​சலுக்கு ஆளாகினர்.

எனவே, அரசுப்​பணி போட்​டித் தேர்​வுக்கு முயற்​சிக்​கும் லட்​சக்​கணக்​கான தமிழக இளைஞர்​கள் வாழ்​வில் ஒளி​யேற்​றும் வகை​யில், அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் குரூப்-4 தேர்வு மூலம் நடப்​பாண்​டில் குறைந்​த​பட்​சம் 30,000 காலிப் ​பணி​யிடங்​களை நிரப்ப உடனடி​யாக அரசாணை வெளி​யிட வேண்​டும். இவ்​வாறு அதில்​ அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *