தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்படுவது பாவமல்ல: திருநாவுக்கரசர் கருத்து | Thirunavukkarasar says It is not a sin to aspire to coalition government in tn

1370282
Spread the love

திருச்சி: தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சிக்கு ஆசைப்​படு​வது தவறோ, பாவமோ இல்லை என காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர் திரு​நாவுக்​கரசர் தெரி​வித்​தார்.

திருச்​சி​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி என்ற கருத்து தற்​போது அதி​கள​வில் பேசப்பட்டு வரு​கிறது. மத்​தி​யில் பாஜக தலை​மையி​லான ஆட்சி கூட்​டணி ஆட்சிதான். இதற்கு முன்பு வாஜ்​பாய், நரசிம்​ம​ராவ் ஆகியோர் பிரதமர்​களாக இருந்​த​போதும் கூட்​டணி ஆட்சி தான் நடந்​தது. பல மாநிலங்​களி​லும் கூட்​டணி ஆட்சி நடந்து வரு​கிறது.

ஆனால், வித்தி​யாச​மான சூழல் கொண்ட தமிழகத்​தில் கடந்த 57 ஆண்​டு​களாக கூட்​டணி ஆட்சி வந்​த​தில்​லை. அமைச்​சர​வை​யில் இடம் வேண்​டும் என்று கூட்​டணி கட்​சிகள் கேட்​ப​தில் தவறு இல்​லை.

கூட்​டணி ஆட்​சிக்கு ஆசைப்படு​வது பாவ​மும் இல்லை. திமுக கூட்​ட​ணி​யில் உள்ள சில கட்​சிகள் தேர்​தல் ஆணைய அங்​கீ​காரத்துக்காக இரட்டை இலக்க எண்​ணிக்​கை​யில் இடம் வேண்​டும் என கேட்​கிறார்​கள். ஆனால், யாரும் அதை ஒரு நிபந்தனையாக வைக்​க​வில்​லை. காங்​கிரஸ் கட்​சி​யும் கூடு​தல் தொகுதி கேட்​டோ, கூட்​டணி ஆட்சி குறித்தோ நிபந்தனை விதிக்காது.

விசிக தலை​வர் திரு​மாவளவன் காங்​கிரஸ் குறித்து விமர்​சனம் செய்​ய​மாட்​டார். ஆனால், வன்​னியரசு போன்ற அடுத்​தக்​கட்ட தலை​வர்​கள் கூட்​டணி தர்​மத்​தோடு பேச வேண்​டும். திமுக கூட்​ட​ணிக்கு விழும் 4 ஓட்​டுகளில், தங்​கள் ஓட்டு 1 என விசிக​வினர் சொன்​னால், அந்த 4 வாக்​கு​களில் 3 வாக்​கு​கள் எங்​களது (காங்​கிரஸ்) வாக்​கு​கள் என கூற முடி​யும்.

விஜய் கட்​சி​யின் மதுரை மாநாட்​டில் ராகுல்​காந்தி கலந்து கொள்​வாரா என்ற கற்​பனைக்கு பதில் கூற முடி​யாது. காம​ராஜர் குறித்து திருச்சி சிவா எம்​.பி. கூறிய கருத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கப்​பட்டு விட்​டது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *