தமிழகத்தில் பருவ மழை தீவிரமாகிறது: 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பின | Monsoon intensifies in Tamil Nadu 15 dams 1522 lakes overflow

1380573
Spread the love

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், இது​வரை 15 அணை​கள், 1,522 ஏரி​கள் நிரம்​பி​ உள்​ளன. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​களில் அரசுத் துறை​கள் மும்​முர​மாக இறங்கி உள்​ளன.

தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை கடந்த அக்​.16-ம் தேதி தொடங்​கியது. அன்று முதல் தமிழகம் முழு​வதும் பரவலாக மழை பெய்து வரு​கிறது. நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில், தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் 2 இடங்​களில் அதி கனமழை​யும், 23 இடங்​களில் மிக கனமழை, 53 இடங்​களில் கனமழை​யும் பெய்​துள்​ளது.

இதனால் அணை​கள், ஏரி​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. ஏற்​கெனவே நிரம்​பி​யுள்ள நீர்​நிலைகளுக்கு வரும் தண்​ணீர் உபரி நீராக அப்​படியே வெளி​யேற்​றப்​படு​கிறது. உபரிநீர் வெளி​யேறும் நீர்​நிலைகளை உன்​னிப்​பாக கண்​காணிக்க அதி​காரி​களுக்கு அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதனிடையே அணை​கள், ஏரி​களில் உள்ள நீர் இருப்பு குறித்து நீர்வள ஆதா​ரத் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழகத்​தில் சென்​னை, மதுரை, கோவை, திருச்சி மண்​டலங்​களில் உள்ள 90 அணை​கள் மற்​றும் நீர்த்​தேக்​கங்​களில் மொத்த கொள்​ளளவு 224 டிஎம்சி (2.24 லட்​சம் மில்​லியன் கன அடி). நேற்​றைய நில​வரப்​படி 196 டிஎம்சி (87.77 சதவீதம்) நீர் இருப்பு உள்​ளது. மாநிலம் முழு​வதும் 38 மாவட்​டங்​களில் மொத்​தம் 14,141 ஏரி​கள் உள்​ளன. இவற்​றில் 1,522 ஏரி​கள் முழு​வது​மாக நிரம்​பி​யுள்​ளன. அவற்​றில், அதி​கபட்​ச​மாக கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் 390 குளங்​கள் நிரம்​பி​யுள்​ளன. 77 முதல் 99 சதவீதம் வரை 1,832 ஏரி​களும், 51 முதல் 75 சதவீதம் வரை 1,842 ஏரி​களும் நிரம்​பி​யுள்​ளன. அதே​நேரம் 620 குளங்​கள் தண்​ணீர் இல்​லாமல் வறண்டு கிடக்​கின்​றன.

சென்னை மாநகருக்கு குடிநீர் ஆதா​ர​மாக விளங்​கும் பூண்​டி, சோழ​வரம், செம்​பரம்​பாக்​கம், தேர்​வாய்க்கண்​டிகை, வீராணம் ஆகிய ஏரி​களின் மொத்த கொள்​ளளவு 13,222 மில்​லியன் கன அடி. நேற்​றைய நில​வரப்​படி நீர் இருப்பு 9,986 மில்​லியன் கன அடி​யாக (75.53 சதவீதம்) உள்​ளது. இதே தேதி​யில் கடந்த ஆண்டு நீர் இருப்பு 6,105 மில்​லியன் கன அடி​யாக இருந்​தது. மேலும், செம்​பரம்​பாக்​கம், புழல், பூண்டி ஆகிய​வற்​றில் முன்​கூட்​டியே வெள்ள நீர் திறக்​கப்​பட்டு போது​மான இடைவெளி பராமரிக்​கப்​பட்டு வரு​ வ​தால், மிக கன மழை பெய்​தா​லும், வெள்ள நீர் திறப்​பின் அளவு மட்​டுப்படுத்​தப்​பட்டு அடை​யாறு மற்​றும் கொசஸ்​தலை ஆற்​றில் பாது​காப்​பாக கடலைச் சென்​றடை​யும். எனவே பொது​மக்​கள் அச்​சப்படத் தேவை​யில்​லை. இவ்​வாறு நீர்வள ஆதா​ரத் துறை தெரி​வித்​துள்​ளது.

தயார் நிலை: நீர்​வளத் துறை அமைச்​சர் துரை​முரு​கன் தலை​மை​யில், துறை செயலர் ஜெ.ஜெய​காந்​தன் முன்​னிலை​யில் காணொலி காட்சி வாயி​லாக நேற்று பரு​வ​மழை முன்​னேற்​பாடு, வெள்​ளத் தடுப்​பு, நீர் இருப்​பு, நீர்​நிலைகளுக்கு ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​கள் குறித்​து, மண்டல தலை​மைப் பொறி​யாளர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார்.

ஏற்​கெனவே தற்​போதுள்ள காற்​றழுத்த தாழ்வு பகு​தி​யில் சிவப்பு மற்​றும் மஞ்​சள் எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்ள 12 மாவட்​டங்​களுக்கு ஐஏஎஸ் அதி​காரி​களை கண்​காணிப்பு அலு​வலர்​களாக தமிழக அரசு நியமித்​துள்​ளது.

மேலும் காவல் துறை​யில் மாநில பேரிடர் மீட்பு படை​யினர், தீயணைப்பு துறை​யினர், உள்​ளாட்சி அமைப்​புகள் தயார் நிலை​யில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும், போதிய நிவாரண மையங்​கள் அமைத்​தல், உணவகங்​களுக்கு தேவை​யான பொருட்​களை இருப்​பில் வைத்​தல், முகாம்​களில் தங்​கும் மக்​களுக்​கான அடிப்​படை வசதி​களை செய்​தல் குறித்து வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்​மைத் துறை நிர்​வாகம், அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கும் அறி​வுறுத்தியுள்​ளது.

அமைச்​சர் ஆய்​வு: பொதுப்​பணித் துறை மற்​றும் நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் எ.வ.வேலு நேற்று சென்னை ஓஎம்​ஆர், பெருங்​குடி, சோழிங்​கநல்​லூர் பகு​தி​களில் மழைநீர் வடி​கால் பணி​களை ஆய்வு செய்​தார். மேலும், பரு​வ​மழை முன்​னேற்​பாடு​கள் மற்​றும் சீரமைப்​புப் பணி​களை மேற்​பார்​வை​யிட நெடுஞ்​சாலைத் துறை மூலம் பொறுப்பு அலு​வலர்​களாக 7 தலை​மைப்​ பொறி​யாளர்​களை நியமித்​து அரசு ஆணை பிறப்​பித்​துள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *