தமிழகத்தில் மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urges CBI investigation for irregularities in transformer procurement in tn

Spread the love

சென்னை: மின்​மாற்றி கொள்​முதலில் நடை​பெற்ற ஊழல் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு தமிழக அரசு உத்​தர​விட பாமக தலை​வர் அன்​புமணி வலியுறுத்தியுள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கையில் கூறியிருப்பதாவது​: தமிழ்​நாடு மின்​சார வாரி​யத்​துக்கு கூடு​தல் விலை கொடுத்து 45,800 மின்மாற்​றிகள் வாங்​கப்​பட்​டது குறித்து வழக்கு தொடர்ந்து விசா​ரணை நடத்த வேண்​டும் என்று தமிழக காவல்​துறை​யின் லஞ்ச தடுப்​புப் பிரி​விடம் புகார் அளித்து 30 மாதங்​கள் ஆகும் நிலை​யில் இன்​று​வரை வழக்​குப்பதிவு செய்​யப்​பட​வில்​லை.

இந்தமுறை​கேடு​களில் முதல் எதிரி​யாக விசா​ரிக்​கப்பட வேண்​டிய​வர் மின்​துறை அமைச்​ச​ராக இருந்த செந்​தில் பாலாஜி. 2-வது எதிரி​ மின்​வாரி​ய முன்​னாள் தலை​வர் ராஜேஷ் லகானி. அவர் பாது​காப்​பான முறை​யில் மத்திய அரசு பணிக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டிருக்​கிறார். 3-வது எதிரி மின் ​வாரிய நிதி கட்​டுப்​பாட்​டாளர் வி.​காசி. இவரது வீட்​டில் வரு​மானவரித் துறை அண்​மை​யில் சோதனை நடத்​தி​யது.

ஆனால், அவருக்கு மின்​வாரி​யத்​தின் தலைமை நிதிக் கட்​டுப்​பாட்​டாள​ராக திமுக அரசு பதவி உயர்வு கொடுத்து கவுர​வித்​துள்​ளது. மின்​மாற்றி கொள்​முதலில் தொடர்​புடைய எதிரி​கள் மீது வழக்கு தொடர்​வதற்கு பதிலாக, அவர்​களுக்கு சன்​மானம் வழங்​கும் திமுக ஆட்​சி​யில், இந்த ஊழல் வழக்​கில் நீதி கிடைக்​கும் என்று எதிர்​பார்க்க முடி​யாது. எனவே, இந்த விவ​காரத்​தில் சிபிஐ விசா​ரணைக்கு தமிழக அரசு உத்​தர​விட வேண்​டும்.

இவ்​வாறு அவர் தெரிவித்​துள்​ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *