தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 5% அதிகம் | fishermen are advised not to venture into the sea,” said Amudha

Spread the love

சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

“கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்படை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகியிருக்கிறது.

ஆனால் சென்னையில் மழை குறைவாக பதிவாகி உள்ளது.

இந்திய கடல் பகுதியில் 3 சுழற்சிகள் ஒன்றாகக் காணப்படுகின்றன. அந்தமான், குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் சுழற்சிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.

மலாக்கா ஜலசந்தி, அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *