தமிழகத்தில் 23-ம் தேதி வரை வழக்கத்தைவிட வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் | Temperatures in Tamil Nadu will increase by 4 degrees Celsius

1351474.jpg
Spread the love

சென்னை: தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் அதிகபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 4 டிகிரி செல்​சியஸ் வரை அதிகமாக இருக்​கக்​கூடும்.

கோடை​காலம் நெருங்கி வரும் நிலை​யில், கோடை காலத்தை போன்று தமிழகத்​தில் வெப்​பநிலை உயர்ந்த வண்ணம் உள்ளது. பிப்​ரவரி மாதத்​திலேயே வெயில் சுட்​டெரித்து வருகிறது. இந்த ஆண்டு வெப்ப அலை ஏற்பட்​டால் அதை தடுப்​ப​தற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்​மட்ட அளவில் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலை​யில், வரும் 4 நாட்​களுக்கு அதிகபட்ச வெப்​பநிலைவழக்​கத்தை விட அதிகமாக இருக்​கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்​துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: தமிழகம், புதுச்​சேரி மற்றும் காரைக்​கால் பகுதி​களில் இன்று (பிப்​.20) முதல் 25-ம் தேதி வரையிலான 6 நாட்​களுக்கு பொதுவாக வறண்ட வானிலை நிலவக்​கூடும். இன்று ஓரிரு இடங்​களில்அதிகபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்​ளது. அதனைத் தொடர்ந்து 21, 22, 23 தேதி​களில்ஒருசில இடங்​களில் வழக்​கத்தைவிட 4 டிகிரி செல்​சியஸ் அதிகரிக்​கக்​கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதிவான வெப்​பநிலை அளவு​களின்​படி, சமவெளிப் பகுதி​களில் அதிகபட்ச வெப்​ப நிலையாக கரூர் பரமத்​தி​யில் 35.5 டிகிரி, மதுரை மாநகரம், மதுரை விமான நிலையம் ஆகியஇடங்​களில் தலா 35 டிகிரி, ஈரோட்​டில் 34.6 டிகிரி செல்​சியஸ் பதிவாகி​யுள்​ளது. குறைந்​த​பட்ச வெப்​பநிலையாக கரூர் பரமத்​தி​யில் 17 டிகிரி, சேலத்​தில் 17.8 டிகிரி, திருப்​பத்​தூரில் 18 டிகிரி, திருத்​தணி, வேலூரில் ஆகிய இடங்​களில் தலா 19 டிகிரி செல்​சியஸ் குளிர் பதிவாகி​யுள்​ளது. மலைப் பிரதேசங்​களான கொடைக்​கானலில் 8 டிகிரி, வால்​பாறை​யில் 10 டிகிரி, உதகை​யில் 11.2 டிகிரி, குன்னூரில் 12 டிகிரி குளிர் பதிவாகி​யுள்​ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். காலை வேளை​யில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்​

படும். அதிகபட்ச வெப்​பநிலை 33 டிகிரி செல்​சி​யஸ், குறைந்​த​பட்ச வெப்​பநிலை 23 டிகிரி செல்​சியஸை ஒட்டி இருக்​கக்​கூடும். மீனவர்​களுக்கான எச்​சரிக்கை ஏதும் இல்லை.இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *