கல்வியில் சாதனைகள் படைக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகப்பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்.25-ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவில், மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை தமிழக அரசின் மிக முக்கியமான ஏழு திட்டங்கள் தொடா்பான விளக்க நிகழ்வுகள் நடைபெறும். இதில், அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொள்வா். இந்த விழாவில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி பங்கேற்கிறாா்.