தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் விபத்து காப்பீட்டு பிரீமியம் தொகையை நவ.10-க்குள் செலுத்த பார் கவுன்சில் வேண்டுகோள் | Bar Council President requests Tn and Puducherry lawyers to pay accident insurance premium by Nov 10

1380506
Spread the love

சென்னை: தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் உள்ள வழக்​கறிஞர்​கள் புதிய விபத்து குழு காப்​பீட்​டுக்​கான பிரீமி​யம் தொகையை நவ. 10-ம் தேதிக்​குள் செலுத்​து​மாறு தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சில் தலை​வர் பி.எஸ்​.அமல்​ராஜ் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சிலைச் சேர்ந்த வழக்​கறிஞர்​களுக்​காக ‘999’ என்ற புதிய குழு விபத்து காப்​பீட்​டுத் திட்​டத்தை சமீ்பத்​தில் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ், ஆர்​.ம​காதேவன் ஆகியோர் தொடங்கி வைத்​தனர்.

இது தொடர்​பாக கவுன்​சில் தலை​வர் பி.எஸ்​.அமல்​ராஜ் விடுத்​துள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 23 ஆண்​டு​களாக பார் கவுன்​சில் சார்​பில் தனி​நபர் விபத்து காப்​பீ்ட்​டுத் திட்​டம் வெற்​றிகர​மாக அமல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், நேஷனல் காப்​பீட்டு நிறு​வனத்​துடன் இணைந்​து, தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சில் செயல்​படுத்​தி​யுள்ள வழக்​கறிஞர்​களுக்​கான விபத்து காப்​பீட்டு திட்​டத்​தி்ல் ஆண்​டுக்கு ரூ.999 -ஐ பிரீமிய​மாக செலுத்​தி​னால் இறப்பு அல்​லது நிரந்தர பாதிப்பு ஏற்​பட்​டால் ரூ.25 லட்​சம் வரை காப்​பீடு பெற முடி​யும்.

அதே​போல, கை, கால், கண் போன்ற உடல் உறுப்​பு​களில் பாதிப்பு ஏற்​பட்​டால் ரூ.12.50 லட்​சம் வரை​யிலும், மருத்​துவ சிகிச்சை பெற ரூ.3 லட்​ச​மும், சிகிச்சை பெற்று ஓய்வு எடுக்​கும்​போது 50 வாரங்​களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீத​மும் உதவித்​தொகை பெறலாம். இந்த கூட்டு குழுக் காப்​பீட்​டுத் திட்​டத்​தில் வழக்​கறிஞர்​கள் பார் கவுன்​சில் இணை​யதளம் வாயி​லாக இணை​ய​லாம். தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் உள்ள அனைத்து வழக்​கறிஞர்​களும் இத்​திட்​டத்​தில் சேர்ந்து பயனடைய வேண்​டும்.

அக். 13 முதல் அடுத்த அண்டு அக். 12 வரை இத்​திட்​டம் அமலில் இருக்​கும். அக். 13 முதல் இந்த குழு விபத்து காப்​பீட்​டுத் திட்​டம் செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளது. இத்​திட்​டத்​தில் சேரு​வதற்​கான பிரீமி​யம் தொகை ரூ.999-ஐ வழக்​கறிஞர்​கள் வரும் நவ. 10-ம் தேதிக்குள் பார் கவுன்​சில் இணை​யதளத்​தில் ஆன்​லைன் வாயி​லாக செலுத்த வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்கப்பட்டுள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *