தமிழக சட்டமன்ற தேர்தல்: “லீவு கொடுக்கலானா” தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை  – Kumudam

Spread the love

இதுகுறித்து தொழிலாளர் நலத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்.23-ஆம் தேதியும், புதுச்சேரியில் நாளை ஏப்.9-ஆம் தேதியும் வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது. இவ்விரு நாள்களிலும் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள், அனைத்து பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களும், அவர்களது தொகுதிகளுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக விடுமுறை அளிக்க வேண்டும். 

அவ்வாறு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது குறித்து புகார் அளிக்க தொழிலாளர் துறை சார்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களும், தொழிலாளர்கள் இந்தக் கட்டுப்பாட்டு அறை அலுவலர் மற்றும் உறுப்பினர்களான எல்.ரமேஷ்(தொழிலாளர் இணை ஆணையர் கைப்பேசி எண்: 7904646090), எல்.ஷோபனா (உதவி ஆணையர் 7299007334), பழனி (உதவிஆணையர் 7904802429), சிவக்குமார்(உதவி ஆணையர் 9043555123) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *