தமிழக பாஜகவில் 261 குற்றவாளிகள்… 1977 வழக்குகள்: செல்வப்பெருந்தகை

Dinamani2f2024 062fa93ca2d1 364a 4b8a A1eb 19c1a9a047ed2fselva1a.jpg
Spread the love

தமிழக பாஜகவில் 261 குற்றவாளிகள் இருப்பதாகவும், அவர்கள் மீது 1977 வழக்குகள் உள்ளதாகவும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுச் சென்று பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றப் பின்னணி உடையவர் என்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை பேசியதாவது:

”சாவு வீட்டில் என்ன பேச வேண்டும் என்பது அண்ணாமலைக்கு தெரியவில்லை. ஆருத்ரா குறித்து நான் எழுப்பிய கேள்வியை அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டவுடன் கோபத்துடன் என்னை ரெளடி பட்டியலில் உள்ளவர் என்று தெரிவித்துள்ளார். தலித் மீது அவதூறு தெரிவித்தால் சிறை தண்டனை கிடைக்கும் என்பது அண்ணாமலைக்கு தெரியாதா?

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுப் போனதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துக் கொண்டேவுள்ளார். குற்றப் பட்டியலில் உள்ள 261 பேரை பாஜக தலைவர்களாக நியமித்துள்ளீர்கள். அவர்கள் மீது 1977 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *