தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம்: மத்திய அரசிடம் பேசி தீர்வுகாண முயற்சிப்பேன் – இபிஎஸ் உறுதி | EPS says issue of tn fishermen being arrested will try to find a solution by talking to central govt

1371473
Spread the love

ராமநாதபுரம்: தமிழக மீனவர்​கள் கைது செய்​யப்​படும் விவ​காரம் தொடர்​பாக மத்​திய அரசிடம் பேசி, உரிய தீர்​வு​காண முயற்சிப்​பேன் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரத்தை மேற்​கொண்டு வரும் பழனி​சாமி, ராம​நாத​புரத்​தில் மீனவர்​கள், விவ​சா​யிகள், நெச​வாளர்​களு​ட​னான கலந்​துரை​யாடல் கூட்​டத்​தில் நேற்று பேசி​ய​தாவது: இலங்கை கடற்​படை​யின​ரால் தமிழக மீனவர்​கள் கைது செய்​யப்​படு​வதை​யும், இலங்கை சிறை​களில் அடைக்​கப்​பட்​டுள்ள மீனவர்​கள் மற்​றும் பறி​முதல் செய்யப்பட்டுள்ள படகு​களை மீட்​க​வும் மத்​திய அரசிட​மும், சம்​பந்​தப்​பட்ட அமைச்​சர்​களிட​மும் பேசி, உரிய தீர்​வு​காண முயற்சிப்பேன்.

கடந்த அதி​முக ஆட்​சி​யில் இரு​முறை பயிர் கடன்​கள் தள்​ளு​படி செய்​யப்​பட்​டுள்​ளன. ராம​நாத​புரம் மாவட்ட விவ​சா​யிகளுக்கு ரூ.540 கோடி காப்​பீட்​டுத் தொகை பெற்​றுத் தரப்​பட்​டுள்​ளது. கடந்த ஆட்​சி​யில் 24 மணி நேரம் மும்​முனை மின்​சா​ரம் வழங்கப்பட்டது. கண்​மாய்​கள் ஆழப்​படுத்​தப்​பட்​டன. ஏறத்​தாழ ரூ.14,400 கோடி​யில் காவேரி-குண்​டாறு திட்​டத்தை மேற்​கொண்டோம்.

ஆனால், திமுக ஆட்​சிக்கு வந்​ததும் இந்த திட்​டத்தை கிடப்​பில் போட்​டு​விட்​டது. தற்​போது மேட்​டூர் அணை நிரம்பி 1.25 லட்​சம் கனஅடி நீர் கடலில் கலந்து வீணாகிறது. காவிரி-குண்​டாறு திட்​டம் இருந்​திருந்​தால், கடலில் உபரி​யாக கலக்​கும் தண்​ணீ​ரால் ராமநாத​புரம் மாவட்ட கண்​மாய்​கள் நிரம்​பி இருக்​கும். மீண்​டும் அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும் காவிரி-குண்​டாறு திட்​டம் முழுமையாக நிறைவேற்​றப்​படும்.

அதே​போல, அதி​முக ஆட்​சி​யில் நெச​வாளர்​களுக்கு பல்​வேறு சலுகைகள் வழங்​கப்​பட்​டன. திமுக ஆட்​சி​யில் அவர்​களுக்கு எந்த சலுகை​யும் கிடைக்​க​வில்​லை. அதி​முக ஆட்​சி​யில் கைத்​தறி நெச​வாளர் கூட்​டுறவு சங்​கங்​கள் லாபத்​தில் இயங்​கின. திமுக ஆட்சியில் கைத்​தறி நெச​வாளர் கூட்​டுறவு சங்​கங்​கள் மூடும் நிலை​யில் உள்​ளன.

நாட்​டுப்​படகு மீனவர்​கள் தங்​களது பிரச்​சினை​களைத் தெரி​வித்​துள்​ளனர். அதி​முக ஆட்​சி​யில் அவற்​றுக்​குத் தீர்​வு​காணப்​படும். 16 ஆண்​டு​கள் மத்​தி​யில் ஆட்சி அதி​காரத்​தில் இருந்த திமுக, கச்​சத்​தீவை மீட்க அழுத்​தம் கொடுக்​க​வில்​லை. கச்​சத்​தீவை மீட்க அதிமுக சார்​பில் மத்​திய அரசை தொடர்ந்து வலி​யுறுத்​து​வோம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

முன்​ன​தாக, ராம​நாத​புரம் சேதுபதி மன்​னர்​களின் அரண்​மனையைப் பார்​வை​யிட்ட பழனி​சாமி, மன்​னர் குடும்​பத்​தைச் சேர்ந்த முத்​து​ராமலிங்க நாகேந்​திர சேதுபதி மற்​றும் அவரது தாயார் லட்​சுமி நாச்​சி​யாரை சந்​தித்​துப் பேசி​னார். தொடர்ந்​து, அங்​குள்ள வரலாற்​றுச் சிறப்​புமிக்க கலைப் பொருட்​கள், மூலிகை ஓவி​யங்​கள், தொல்​லியல் பொருட்​களைப் பார்​வை​யிட்​டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *