நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து 3 கண்ணாடியிழைப் படகுகளில் 14 மீனவர்கள் வெள்ளிக்கிழமை கடலுக்குள் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே இரவு படகை நிறுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இரண்டு இலங்கைப் படகுகளில் வந்த 4 பேர், அவர்களது படகை கொண்டு மீனவர்கள் இருந்த படகை மோதி, இயந்திரங்களை சேதப்படுத்தி தாக்கியுள்ளனர்.
இதில், காயமடைந்த மீனவர்கள் விஸ்வநாதன், மூர்த்தி, செல்வராசு ஆகியோர் நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.