தமிழே உயிரே : இந்தி ‘நெவர்’… இங்கிலீஷ் ‘எவர்’ தமிழனின் வெற்றி!| மொழிப்போரின் வீர வரலாறு – 3 | series-on-history-of-anti-hindi-imposition-protest-part-three

Spread the love

 ‘குண்டுக்கஞ்சோம் வடவர்கள் கூட்டுக்கஞ்சோம் பலபல குண்டர்க்காம் செய்தித்தாள் கூற்றுக்கஞ்சோம் அண்டிற்றா இந்நாட்டில் அயலானின் இந்திமொழி? அண்டைப்புழு மாந்திடுமென்று அதிராயோ முரசே!’ – என்று அஞ்சாமை முழங்குகிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

இது நியாயமில்லை!

நாட்டின் சுதந்திரத்துக்கு முன்பு, 1937-ம்ஆண்டு கட்டாய இந்திக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு, 1950-ல் மீண்டும் ஓர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது. காரணம், சென்னை மாகாண கல்வியமைச்சராக இருந்த மாதவ மேனன், உயர்நிலைப் பள்ளிகளில் மீண்டும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் ஆணை ஒன்றை 1950-ம் ஆண்டு மே 2-ம் தேதி பிறப்பித்தார்.

அதற்கு, தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தது. கட்டாய இந்தியை எதிர்த்து தி.மு.க போராட்டத்தைத் தொடங்கியது. தி.மு.க-வினர் பலர் கைது செய்யப்பட்டார்கள். கட்டாய இந்தியை எதிர்த்து பேரணி நடத்த அண்ணா முற்பட்டார். எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல், இந்தி கட்டாயப் பாடம் என்ற ஆணையை ஜூன் 18-ம் தேதி அரசு வாபஸ் பெற்றது.

பின்னர், கல்வியமைச்சர் மாதவ மேனன், மொழிக்கல்வியில் ‘சீர்திருத்தம்’, ‘மாறுதல்’ போன்றவை இனிமேல் இருக்காது என்ற அளவுக்கு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தார். ‘திருத்தியமைக்கப்பட்ட’ அந்தத் திட்டம் வரவேற்புக்குரியதாக இருந்தது. அதன்படி, மாநில மொழியை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நிலை வருகிறது. அதாவது, தமிழ்நாட்டில் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும்… ஆந்திராவில் தெலுங்கு மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதாக அது இருந்தது. ஆங்கிலத்துக்கும் அந்த முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தி கட்டாயம் என்று அல்லாமல், விருப்பம் இருப்பவர்கள் இந்தியைப் படிக்கலாம், அல்லது கைத்தொழில் பழகலாம் என்று அந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அந்தளவில் அமைச்சர் மாதவ மேனன் கொண்டுவந்த திட்டம் வரவேற்பைப் பெற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *