தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் நியமனம் | Retired Justice Rajamanickam appointed as Tamil Nadu Lokayukta Chairman

1351492.jpg
Spread the love

சென்னை: தமிழ்நாடு லோக்​ஆ​யுக்தா தலைவராக நீதித்​துறை உறுப்​பினராக இருந்த உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி பி.ராஜ​மாணிக்​கத்தை நியமித்து தமிழக அரசு உத்தர​விட்​டுள்​ளது. இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மை துறை செயலர் ஜி.பிர​காஷ் வெளி​யிட்​டுள்​ளார்.

தமிழ்​நாடு லோக் ஆயுக்தா சட்டப்​படி, லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்​கப்​பட்​டுள்​ளது. பொது ஊழியர்​களுக்கு எதிரான ஊழல் புகார்களை இந்த அமைப்பு விசா​ரிக்​கும். ஒரு தலைவர், 2 நீதித்​துறை உறுப்​பினர்​கள், நீதித்​துறை சாரா 2 உறுப்​பினர்கள் இந்த அமைப்​பில் இருப்​பார்​கள். இதில், தலைவர் மற்றும் நீதித் துறை சாராத உறுப்​பினர்கள் பணியிடம் காலியாக இருந்த நிலை​யில், தகுதி​யானவர்களை தேர்வு செய்​யும் பணி நடைபெற்​றது.

இதைத் தொடர்ந்து, தற்போது நீதித்​துறை சார்ந்த உறுப்​பினராக உள்ள சென்னை உயர்​நீ​தி​மன்ற முன்​னாள் நீதிபதி பி.ராஜ​மாணிக்​கம், லோக் ஆயுக்தா தலைவராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். காலியாக உள்ள நீதித் துறை சாரா உறுப்​பினர்கள் இடங்​களுக்கு நாமக்கல் மாவட்​டத்தை சேர்ந்த மாவட்ட நுகர்​வோர் விவகாரங்கள் குறைதீர்வு ஆணையத்​தின் தலைவர் வி.ராம​ராஜ், வருமானவரி மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யத்​தின் முன்​னாள் உறுப்​பினர் ஆறுமுக மோகன் அலங்​காமணி ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்டு, நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

தலைவராக நியமிக்​கப்​பட்​டுள்ள ராஜமாணிக்கம் 2027 ஏப்ரல் 17-ம் தேதி வரை பதவி​யில் இருப்​பார். புதிய உறுப்​பினர்கள் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது – இதில் எது ​முதலில் வரு​கிறதோ அதுவரை ப​தவி​யில் இருப்​பார்​கள் என அரசாணை​யில் கூறப்​பட்​டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *