தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் லேசான மழை, மிதமான மழை?|Orange alert for Chennai as thunderstorms expected today

Spread the love

சென்னையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே நிலை தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களுக்கும் பொருந்தும்.

தற்போது சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி,

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்’ வழங்கப்பட்டுள்ளது.

கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். இங்கே ‘மஞ்சள் அலர்ட்’ வழங்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையத்தின் நேற்றைய அப்டேட்டின் படி,

இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டிருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *