தர்மபுரி: விபத்தில் 2 இளைஞர்கள் பலி; ஆணவப்படுகொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு | Dharmapuri: Two Youths Die in Accident; Relatives Claim Honor Killing

Spread the love

உயிரிழந்த இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகளை காதலித்து வந்துள்ளனர். வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவிகளின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், மாணவிகளின் உறவினர்கள் சுனீல்குமார் மற்றும் முருகன் இருவரையும் “கொலை செய்து விடுவோம்” என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இளைஞர் உயிரிழப்பு

இளைஞர் உயிரிழப்பு
representative image

இதனால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் “இது விபத்து அல்ல… திட்டமிட்டு செய்யப்பட்ட ஆணவப்படுகொலை” எனவும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறியதால், காவல் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.

பாலக்கோடு டிஎஸ்பி ராஜசுந்தர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பாலக்கோடு காவல்துறையினர் “இது ஆணவப்படுகொலையா அல்லது விபத்தா?” என்ற இரு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *