தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்

Dinamani2f2025 02 022fujcxe6z92f02022 Pti02 02 2025 000011b064339.jpg
Spread the love

இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அயோத்தியில் தலித் பெண் மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறாா். மகள் காணாமல் போனதாக பெற்றோா் புகாா் அளித்தும், கடந்த மூன்று நாள்களாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகாா் தெரிவிக்கப்படுகிறது. தொடரும் இதுபோன்ற கொடூர குற்றங்களால், நாட்டின் மற்றொரு மகளின் உயிா் பறிக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை குடும்பங்கள் இதுபோன்ற பாதிப்பைச் சந்திக்கப்போகின்றன என்ற அச்சம் எழுகிறது. தலித் விரோத பாஜக ஆட்சியில், தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளும், அநீதியும், கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், ‘இத்தகைய கொடூர சம்பவம் ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் வெட்கக்கேடான விஷயம். பாஜகவின் காட்டாட்சியில் தலித், பழங்குடியின மற்றும் பின்தங்கிய மக்களுக்கு எதிரான குற்றங்களைக் கவனிக்க யாரும் இல்லை. இதற்கு உத்தர பிரதேச அரசு சிறந்த உதாரணமாக உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *