தவெகவின் சென்னை எழும்பூர் தொகுதி வேட்பாளராக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகனை விஜய் உறுதி செய்திருக்கிறார். இந்நிலையில், எழும்பூர் தொகுதியில் இன்று முதல் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார் ராஜ்மோகன். செங்கோட்டையன், ஜே.சி.டி.பிராபகர், ஆதவ் அர்ஜூனா மற்றும் மாவட்டச் செயலாளர் பூக்கடை குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் பேசியதாவது,”அமைச்சராக இருந்த போது எழும்பூருக்கு பல பேருந்துகளை விட்டிருக்கிறேன். எழும்பூர் தவெகவின் எஃகு கோட்டையாக மாறியிருக்கிறது. அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கிய போது திரைப்படம் போல 100 நாட்கள்தான் என்றார்கள்.