சட்டத்துக்கு முன்பாக அனைவரும் சமம்
‘வழக்கறிஞராக இருந்த போது நான் இரண்டு விதமான நபர்களை சந்தித்திருக்கிறேன். ஒரு பக்கம் சமூகத்தின் இழிவு மனப்பான்மையால் மலம் அள்ளப் போய் உயிரிழந்த தொழிலாளர்களின் மனைவிகள். இன்னொரு பக்கம் எல்லா அதிகாரமும் அவர்களால் எதையும் சாதிக்கும் வல்லமை வாய்க்கப்பெற்ற சக்திமிக்கவர்கள். ஆனால், எல்லாருக்கும் மேலானது நம்முடைய சட்டம்தான்.
சட்டத்துக்கு முன்பாக அனைவரும் சமம். எந்த பேதமும் கிடையாது. ஆனால், இதை பேசுகையில் அதெல்லாம் வெறுமென சட்டப்புத்தகத்தில் மட்டுமே சாத்தியம். யதார்த்தம் வேறாக இருக்கும் என்றனர். சட்டத்தை எந்த பேதமும் இல்லாமல் அமல்படுத்தும் இடத்துக்கு வர வேண்டும் என்பதற்காகதான் ஐ.பி.எஸ் ஆனேன்.’ என சமீபத்தில் ஒரு மேடையில் பேசியிருக்கிறார் இஷா சிங்.
இவர்தான் இன்றைக்கு கட்டுப்பாட்டை மீறி தவெகவினர் சிலரை அனுமதிக்க முயன்ற போது, கடுமையாக எதிர்வினையாற்றி அவர்களை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.!