தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் நாமக்கல் ஏஎஸ்பியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

Spread the love

கரூர்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக நாமக்​கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்​றும் சம்​பவத்​தில் காயமடைந்த தாய், மகளிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை நடத்​தினர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி விஜய் பங்​கேற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசா​ரித்து வரும் சிபிஐ அதி​காரி​கள், 300-க்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு சம்​மன் அனுப்பி விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

வேலு​சாமிபுரத்​தில் கடை வைத்​திருப்​பவர்​கள், பாது​காப்​புப் பணி​களில் ஈடு​பட்ட போலீ​ஸார், ஆம்​புலன்ஸ் உரிமை​யாளர்​கள், ஓட்​டுநர்​கள், தவெக வழக்​கறிஞர், மின் வாரி​யத்​தினர், பவர் கிரிட் கார்ப்​பரேஷன் அதி​காரி​கள் உள்​ளிட்​டோரிடம் சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தி​யுள்​ளனர். தற்​போது, கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்​தவர்​கள் மற்​றும் உயி​ரிழந்​தவர்​களின் உறவினர்​களிடம் விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *