மற்றொரு நிர்வாகியான ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களிடம், “தவெகவின் அனைத்து நிர்வாகிகளையும் பல்வேறு குழுக்களில் பயன்படுத்த தலைவர் நினைக்கிறார். அனைவருக்கும் சம வாய்ப்பும், உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் பொதுக் கூட்டங்களுக்கு புதிய விதிகளை கொண்டு வந்து தவெக பொதுக் கூட்டங்கள் மற்றும் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை முட்டுக்கட்டை போடுவதாகவும் அருண்ராஜ் குற்றம்சாட்டினார்.