அப்படியிருக்க விஜய் ரங்கசாமியின் ஆட்சியை எதிர்த்து பேசுவாரா என்பது கேள்விக்குறியே. ஆனால், ரங்கசாமி பாஜகவோடு கூட்டணியில் இருக்கிறார். ஆக, அதைப் பற்றி தொடாமல் போனாலும் விஜய் மீது விமர்சனங்கள் பாயும். அதனால் எந்தப் பிரச்னையை தொட்டு யாரை பிரதானமாக எதிர்த்து பேச வேண்டும் என்பதில் தவெக முகாம் குழம்பியிருக்கிறது.

திரிசங்கு நிலையில் இருப்பதால் புதுச்சேரிக்கு சம்பந்தமான பொது விஷயங்களை மட்டும் தொட்டுச் செல்லும் மனநிலையில் இருக்கிறதாம் விஜய்யின் வியூகத் தரப்பு.
துணை நிலை ஆளுநர்களால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றத்துக்கு ஏற்படும் சிக்கல்கள், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை, நிலையான ஆட்சி போன்றவற்றை சுட்டிக்காட்டியபடி விஜய்யின் உரை இருக்கலாம் என்கின்றனர்.
எம்.ஜி.ஆர் அதிமுகவை ஆரம்பித்து முதலில் புதுச்சேரியில்தான் ஆட்சியைப் பிடித்தார். அந்த சென்டிமென்டையும் தன்னோடு ஒப்பிட்டு விஜய் பேசக்கூடும். மொத்தத்தில் புதுச்சேரி கூட்டத்தின் வழி தவெக முகாம் போட்ட கணக்கு ஒன்று, ஆனால் நடப்பது வேறொன்றாக இருக்கிறது என்கிறார்கள் சிலர்.!