தவெக மாநாடு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Spread the love

மாநாட்டில் 10 லட்சம் முதல் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தவெக தலைவர் விஜய்யும் சென்னையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டுவிட்டார்.

மாநாட்டையொட்டி பாதுகாப்புக்காக 3000 காவலர்களும், தவெக சார்பில் 2000 பவுன்சர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மதுரை – தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல், அதிக அளவில் கூட்டம் கூடும் என்பதால் மாணவர்கள் நலன் கருதி எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது மாநாடு நடக்கும் சுற்றுவட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் பொருந்தாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *