நாட்டார் தெய்வங்கள் யாவும் புராணங்கதைகள் வழியாக திடீரென உருவாகி வழிபடப்படுபவை அல்ல. சமூக மற்றும் சாதிய அதிகாரங்களுக்கு எதிராக சமரிட்டு பலியான மனிதர்களின் ரெத்த சாட்சியங்களாக நிற்க கூடியவை. இத்தெய்வங்கள் குறித்த கதைகள் வாய்மொழிக்கதைகளாக நிலைப்பெற்றாலும் சடங்குகளின் வழி அதன் உண்மைத் தன்மையை கண்டறிய முடிகிறது.
நாட்டார் சடங்குகள் நிகழ்காலத்தில் பல முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் சமூக அரசியலின் ஒரு அங்கமாகவே இன்றளவும் இச்சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன.
தனக்கு நேர்ந்த அநீதிக்கெதிராக, அதிகார ஆணவத்திற்கெதிராக உக்கிரக் கோவத்தோடு நீதிகோரும் இத்தெய்வங்களை அறிந்து கொள்வது காலத்தின் தேவையாகிறது.
நாம் இதுவரைக்கும் சாதி, சமூகம் மீறிய காதலுக்காக ஆணவக்கொலை செய்யப்பட்டவர்கள், ஆண் என்ற அதிகாரத்தை மீறியதற்காக கொல்லப்பட்டவர்களின் கதைகளைத் தான் பார்த்தோம். ஆனால், இச்சமூகம் குற்றம் என்றும் சொல்லும் ஒரு செயலை செய்தற்காக கொல்லப்பட்ட தெய்வங்களின் கதை தான் இது.
