சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
பிப்ரவரி 27-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.23) நடைபெற்றது.

சிவகார்த்திகேயனைக் கணிக்க முடியாது!
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் இரா.சரவணன், “பத்திரிகையாளராக 15 வருடங்கள் இருந்திருக்கிறேன். சினிமாவில் 10 வருடங்கள் இருந்திருக்கிறேன். இந்த 25 வருடங்களில் நான் எத்தனையோ அரசியல் ஆளுமைகளை, பிரபலங்களைப் பார்த்திருக்கிறேன், கடந்திருக்கிறேன்.
ஆனால் என்னால் கணிக்கவே முடியாத ஒரு நபர் என்றால், அது சிவகார்த்திகேயன் தான். எந்த இடத்தில் என்ன செய்வார் என்று கணிக்கவே முடியாது.