சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
இப்படம் (பிப்.27) வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ‘தாய் கிழவி’ படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டி இருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” “தாய் கிழவி’ படம் மனதிற்கு நெருக்கமான படைப்பாக இருக்கிறது.
படத்தின் முதல் பாதி மிகவும் ஜாலியாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது. அந்த ஆம்புலன்ஸ் காட்சியில் இருந்து படம் அப்படியே மாறி, இரண்டாம் பாதியின் இறுதியில் ஒரு மறக்க முடியாத மாபெரும் ப்ளாக் பஸ்டராக உருவெடுக்கிறது.
பேராசை, கல்லாமை, வாழ்க்கையின் நோக்கம் மற்றும் பெண் முன்னேற்றம் போன்ற பல கருப்பொருள்கள் மிக அழகாகக் கையாளப்பட்டுள்ளன.