காருக்குள் இருந்த இளைஞர் வேட்டி மற்றும் பனியன் அணிந்திருந்தார். போதையில் இருந்த அவர் கீழே இறங்காமல், காரின் மீது ஏறி நின்றார். பிறகு சிகரெட் பிடித்தபடி அங்கிருந்த மக்களிடம் பிரச்னை செய்தார்.

தன் இருப்பிடத்தை பற்றி தெளிவாக சொல்லாமல், ‘நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உள்ளேன்’ என்று கூறி மக்களை மிரட்டியுள்ளார். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.